மகளிர் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை
திருவாலங்காடு:புளியங்குண்டா கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியங்குண்டா கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, மகளிர் சுகாதார வளாகம் இல்லாததால், இப்பகுதி பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகிற்னர். எனவே, மகளிர் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.