உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை

பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை

பூண்டி:பூண்டி ஒன்றியம் குண்ணவளம் ஊராட்சி, குப்பத்துபாளையம் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த நீர்த்தேக்க தொட்டி வாயிலாக கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் உள்ளது.கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பள்ளி அருகே உள்ளதால், மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழே விளையாடி வருவதாக பெற்றோர் புலம்புகின்றனர்.எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை