உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி

 சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி

கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே நெடுஞ்சாலையோரம் குப்பை எரிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து, பிரையாங்குப்பம், கடம்பத்துார் வழியாக செல்லும் திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியே தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பழைய திருப்பாச்சூர் பகுதியில் சேகரமாகும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றாமல், தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, குப்பையை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை