உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பீரோவில் இருந்த ரூ.50,000 திருட்டு

பீரோவில் இருந்த ரூ.50,000 திருட்டு

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சி பூமாலை நகரில் வசிப்பவர் கருணாநிதி 45. தனியார் கம்பெனியில் பணி செய்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்ற நிலையில், இவரது மனைவி 100 நாள் பணிக்கு சென்றார். இதை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் கதவு மற்றும் பீரோவை தங்கள் வைத்திருந்த கள்ளச்சாவி வாயிலாக திறந்து பீரோவில் இருந்த 50,000 ரூபாயை திருடி சென்றனர்.கருணாநிதி அளித்த புகாரின்பேரில் திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ