மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை
திருவள்ளூர்; மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியருக்கு, 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் உள்ள மாணவ - மாணவியருக்கு, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.நடப்பு 2024- - 25ம் கல்வி ஆண்டிற்கு, புதிய மற்றும் புதுப்பித்தல் ஆகிய விண்ணப்பத்தை, மாணவ - மாணவியர் கல்வி நிறுவனங்களில் அளிக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை, சென்னை சேப்பாக்கம், எழிலகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அலுவலகத்திற்கு, வரும் டிச., 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.