உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூந்தமல்லி அரசு பள்ளி அணி மாநில கபடி போட்டிக்கு தேர்வு

பூந்தமல்லி அரசு பள்ளி அணி மாநில கபடி போட்டிக்கு தேர்வு

பூந்தமல்லி பூந்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான கபடி போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். பூந்தமல்லியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவர்களின் கபடி அணி, பள்ளிக்கல்வி துறை சார்பில், திருவள்ளூர் மாவட்ட அளவில், அண்மையில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்றனர். இதில், 17 வயது பிரிவில், பூந்தமல்லி அரசு பள்ளி மாணவர்கள், இறுதி போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசை பெற்று அசத்தினர். இதையடுத்து, திருச்சியில் டிச., 5ம் தேதி, மாநில அளவில் நடைபெற உள்ள கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவிலான கபடி போட்டியில் விளையாட உள்ள மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி