உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடையின்றி மாணவர்கள் தவிப்பு

நிழற்குடையின்றி மாணவர்கள் தவிப்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா ஊராட்சியில் திருவள்ளூர் - - அரக்கோணம் நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது.இந்த நிறுத்தத்தில் இருந்து 1,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் அரக்கோணம், திருவள்ளூர், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.தற்போது இந்த நிழற்குடை பாழடைந்த நிலையில் உள்ளதால் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் கடும் வெயிலில் சாலையோரத்தில் நிற்க இடமின்றி தவிக்கின்றனர். இவர்கள் பேருந்துக்காக சாலையில் காத்திருப்பதால், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை