மேலும் செய்திகள்
சகதியாக மாறிய சாலை முல்லைநகரில் அவலம்
30-Nov-2024
சேதமடைந்த ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை
04-Dec-2024
கூடப்பாக்கம்:திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட கூடப்பாக்கம் ஊராட்சி. திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து, இந்த ஊராட்சிக்கு செல்லும் கிராம சாலையை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுவதோடு சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.மேலும் பள்ளி, கல்லுாரி மற்றும் பணிகளுக்கு செல்லும் நடந்து செல்லும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில்கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, கூடப்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கூடப்பாக்கம் ஊராட்சியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
30-Nov-2024
04-Dec-2024