உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பல்லாங்குழியான தண்டலம் சாலை

பல்லாங்குழியான தண்டலம் சாலை

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது உளுந்தை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில் தண்டலம் முதல், காட்டு கூட்டு சாலை வரை நெடுஞ்சாலை பல பகுதியில் சேதமடைந்து மோசமாக உள்ளது.குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட மண்ணுார், வளர்புரம் பகுதியில் நெடுஞ்சாலை பல்லாங்குழியாக மாறி மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ