உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேர்வு எழுத வந்த பாம்பு தெறித்து ஓடிய மாணவர்கள்

தேர்வு எழுத வந்த பாம்பு தெறித்து ஓடிய மாணவர்கள்

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று காலை பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்தது. அதனால், மாணவர்கள் புத்தக பைகளை வகுப்பறைக்கு வெளியே வைத்திருந்தனர்.பள்ளி கட்டடத்திற்கும், சுற்றுச்சுவருக்கும் இடையே உள்ள புதர்களில் ஏராளமான பாம்பு பொந்துகள் உள்ளன. அதிலிருந்து வெளியேறிய சிறிய நல்ல பாம்பு ஒன்று, மாணவர்களின் புத்தக பைகளுக்குள் நுழைந்தது. இதை கண்ட மாணவர்கள் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரியிடம் தெரிவித்தனர்.தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு, புத்தக பைகளை கலைத்து பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்தனர்.சற்று நேரத்தில் கட்டடத்தை ஒட்டியிருந்த புதரில் இருந்து வெளியேறிய சிறிய கொம்பேரி மூக்கன் பாம்பு ஒன்றையும் பிடித்தனர். இரு பாம்புகளையும், ஏடூர் காப்பு காட்டில் விடுவித்தனர்.பள்ளி வளாகத்திற்குள் ஏராளமான பாம்புகள் இருப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். காலாண்டு விடுமுறைக்குள் பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, சிமென்ட் தரை அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிகளுக்குள் அடுத்தடுத்து வெளியேறிய பாம்புகளை கண்டு மாணவர்கள் அலறியடித்து ஓடியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை