பராமரிப்பில்லாத அம்மா பூங்கா மதுக்கூடமாக மாறிய அவலம்
வெங்கத்துார்,கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி, 2018 பிப்ரவரி மாதம் துவங்கி, 2020ம் ஆண்டு நிறைவடைந்தது.இந்த பூங்காவில் உடற்பயிற்சி உபரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால், பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் முழுதும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகியுள்ளன.இதனால், 'குடி'மகன்கள் பூங்கவை மதுக்கூடமாக மாற்றி விட்டனர். இது, அப்பகுதி வாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, 'அம்மா' பூங்காவை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.