உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / செடிகள் தயாரிக்கும் பணி மும்முரம்

செடிகள் தயாரிக்கும் பணி மும்முரம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே கொட்டகை அமைத்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் செடிகள் வளர்த்தல் பணி நடந்து வருகிறது.இதில் 4 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புங்கை, சீத்தா, நெல்லி உள்ளிட்ட விதைகள் குடுவையில் அடைத்து கொட்டகையில் வைத்து செடிகள் வளர்க்கப்படும். தற்போது 1,000 செடிகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது . 30 நாட்கள் ஆனதும் விதைகள் செடிகளாய் முளைக்கும்.பின் ஊராட்சியில் உள்ள சாலையோரங்கள், அரசுக்கு சொந்தமான இடங்களில் நடப்படும். மேலும் வீடுகளில் மரம் வளர்க்க ஆர்வமுள்ள ஊராட்சியை சேர்ந்த ஆர்வலர்கள் வந்து பெற்று செல்லலாம் என ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை