உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில கயிறு இழுக்கும் போட்டி திருத்தணி தளபதி பள்ளி முதலிடம்

மாநில கயிறு இழுக்கும் போட்டி திருத்தணி தளபதி பள்ளி முதலிடம்

திருத்தணி, மாநில அளவில் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த கயிறு இழுக்கும் போட்டியில், திருத்தணி தளபதி பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து கோப்பை வென்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் தனியார் கல்வி நிறுவனத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி, கடந்த 12 மற்றும் 13ம் தேதி நடந்தது.இதில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 20 மாவட்டங்களில் இருந்து, 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியர் என, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இப்போட்டியில், திருத்தணி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இடையே நடந்த கயிறு இழுக்கும் போட்டியில், மாநில அளவில் திருத்தணி தளபதி பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.இவர்களுக்கு வெற்றி கோப்பையும், பரிசு தொகை மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களை, தாளாளர் எஸ்.பாலாஜி, உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி