/   உள்ளூர் செய்திகள்   /  திருவள்ளூர்  /   திருவள்ளூர்: புகார்பெட்டி; சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை                      
திருவள்ளூர்: புகார்பெட்டி; சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கற்கள் பெயர்ந்த சாலை சீரமைக்க எதிர்பார்ப்பு தி ருநின்றவூர் அடுத்த பாக்கம் ஊராட்சி ஸ்ரீபதி நகர், ராம் நகர், கவுரி நகர் வழியாக நத்தம்பேடு பகுதிக்கு செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. கடந்த 2012-13ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட இச்சாலை, அதன்பின் 10 ஆண்டுகளாக எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.வேல்முருகன், ஸ்ரீபதி நகர், பாக்கம்.