உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பனியால் ரயில்கள் தாமதம் பயணியர் அவதி

பனியால் ரயில்கள் தாமதம் பயணியர் அவதி

திருவாலங்காடு:திருவாலங்காடு, மணவூர் பகுதிகளில் நேற்று காலை, திடீர் பனி மூட்டம் அதிகரித்ததால், ரயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பணியர் அவதியடைந்தனர்.மார்கழி மாதம் முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில், நேற்று காலை திடீரென பனி மூட்டம் அதிகரித்தது. இதனால் அரக்கோணம் --- சென்னை மார்க்கத்தில் காலையில் புறப்பட வேண்டிய 20க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள், மற்றும் எக்ஸ்பிரஸ்கள் ஊர்ந்தபடியே சென்றன.அரக்கோணத்தில் இருந்து, மூர்மார்கெட், பீட்ச், வேளச்சேரி செல்லும் ரயில்கள், 20 -- 30 நிமிடம் தாமதமாக சென்றன. இதனால் புறநகர் ரயில் பயணியர் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை