உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பில்லாத கால்நடை மருந்தகம்

பராமரிப்பில்லாத கால்நடை மருந்தகம்

போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ கிளை மருந்தகம் உள்ளது.இங்கு போளிவாக்கம், இலுப்பூர், வலைசைவெட்டிக்காடு என 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வந்து செல்கின்றனர்.இந்த கால்நடை மருத்துவ கிளை மருந்தகம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் அலுவலர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து செல்கின்றனர்.கால்நடை குடிநீர் தொட்டியும் பராமரிப்பில்லமல் குடிநீர் இல்லாமல் புதர் சூழ்ந்துள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் கால்நடை கிளை மருத்துவ மருந்தகத்தை சீரமைக்கவும் கால்நடை குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ