திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் அம்மா உணவகம் வருமா?
திருவள்ளூர், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட, 'அம்மா' உணவகம் மீண்டும் வர பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 'அம்மா' உணவகம் செயல்பட்டு வந்தது. மருத்துவமனை விரிவாக்கத்திற்காக, பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.திருவள்ளூர் அரசு மருத்துவமனை திறந்து ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஆனால், மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த, 'அம்மா' உணவகம் கட்டடம் இடித்து அகற்றப்பட்ட பின் திறக்கப்படவில்லை.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏழை, எளியோர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது, குறைந்த விலையில், 'அம்மா' உணவகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், இரண்டு ஆண்டுக்கு முன் அகற்றப்பட்ட, 'அம்மா' உணவகம் இதுவரை இங்கு துவங்கப்படவில்லை.எனவே, நகராட்சி மற்றும் மருத்துவமனை நிர்வாகம், மீண்டும் அம்மா உணவகம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.