மேலும் செய்திகள்
பைக் விபத்தில் வக்கீல் பலி
11-Aug-2025
பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு
10-Aug-2025
திருத்தணி:திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மனைவி ஜிஜிபாய்,59. இவர், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வீட்டில், விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை, விநாயகர் சிலைக்கு முன் குத்துவிளக்கேற்றிய போது, எதிர்பாராத விதமாக ஜிஜிபாய் புடவையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி இறந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
11-Aug-2025
10-Aug-2025