உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தண்டவாளம் அருகே பெண் சடலம் மீட்பு

தண்டவாளம் அருகே பெண் சடலம் மீட்பு

கடம்பத்துார்:ரயில் தண்டவாளம் அருகே கிடந்த பெண் சடலத்தை மீட்டு அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் செஞ்சி பானம்பாக்கம் - கடம்பத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் மின்சார ரயில் செல்லும் தண்டவாளம் அருகே பெண் சடலம் கிடப்பதாக நேற்று காலை அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரக்கோணம் ரயில்வே போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 35 வயதிருக்கும். புறநகர் மின்சார ரயில் செல்லும் போது தவறி விழுந்தாரா, அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை