உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளையாடும்போது இளைஞர் திடீர் பலி

விளையாடும்போது இளைஞர் திடீர் பலி

திருநின்றவூர் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்: , திருகொளத்துார், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30; எல்.ஐ.சி., முகவர். இவரது மனைவி ரேணுகா, 26.இவர், நேற்று மதியம், திருநின்றவூர் அடுத்த நத்தம்மேட்டில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். நண்பர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது. திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ