உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / டூ - வீலர்கள் மோதல் வங்கி மேலாளர் மரணம்

டூ - வீலர்கள் மோதல் வங்கி மேலாளர் மரணம்

திருவாரூர்:திருவாரூர் அருகே, டூ - வீலர்கள் மோதி கொண்டதில், வங்கி மேலாளர் இறந்தார். திருவாரூர் அருகே, வைப்பூரில், கடந்த, 25 இரவு, 11:00 மணிக்கு, இரு டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதின. இதில், நாகப்பட்டினத்தில் இருந்து, திருவாரூர் நோக்கி வந்த நபர், அதே இடத்தில் இறந்தார். திருவாரூரில் இருந்து, சொந்த ஊரான, குரும்பேரிக்கு, ராயல் என்பீல்டு புல்லட் வாகனத்தில் சென்ற, கார்த்தி, 27, படுகாயத்துடன், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார், இறந்தவர் உடலை கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர், கேரள மாநிலம், கோட்டையத்தைச் சேர்ந்த, ராகுல், 36, என்பதும், இவர், நாகப்பட்டினம், அரசு வங்கியில், மேலாளராக பணிபுரிந்ததும் தெரிந்தது. வைப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !