வீட்டில் நகை, பணம் திருட்டு
துாத்துக்குடி:துாத்துக்குடி கே.டி.சி., நகரை சேர்ந்தவர் நிர்மல்ராஜ். பெயின்டரான இவர் உறவினர் இல்ல விழாவிற்காக கடந்த 14ம் தேதி குடும்பத்தினருடன் தஞ்சாவூர் சென்றிருந்தார். நேற்று வீடு திரும்பினர். வீட்டின் மாடி கதவை உடைத்து பீரோவில் இருந்த மோதிரம், வளையல் உள்ளிட்ட 34 கிராம் தங்க நகைகள், ரூ. 2 லட்சம், மகள்கள் உண்டியலில் சேர்த்து வைத்த ரூ. 2 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.