உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மதுக்கடைகளை மூட உதயநிதியிடம் மனு

மதுக்கடைகளை மூட உதயநிதியிடம் மனு

தூத்துக்குடி:தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதியை சந்தித்த கத்தோலிக்க சபையினர் புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி வந்திருந்தார். அவரை சந்தித்த தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு ரவிபாலன், முதன்மைச் செயலர் அந்தோணி ஜெகதீசன் ஆகியோர் இயேசு இறந்த தியாக நாளான புனித வெள்ளியன்று அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !