திருச்செந்தூர் கோவில் தக்கார் பொறுப்பேற்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்காராக அருள் முருகன் நியமனம் செய்யப்பட்டார். முருகப் பெருமான் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் செயல் பட்டு வந்தார். அவருடைய பதவிக்காலம் ஆக,.31 அன்று நிறைவு பெற்ற நிலையில், அவர் மீண்டும் தக்காராக நியமனம் செய்ய பட்டார். அவர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் பொறுப்பேற்றார்