உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

திருச்செந்தூர்;திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் நீர் உள்வாங்கியது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை(புதன்கிழமை) மாலையில் துவக்க உள்ள பவுர்ணமி மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திடீரென கடல் நீர் உள்வாங்க தொடங்கியது. பின்னர் சுமார் 80 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியது. இரவிலும் உள்வாங்கியே காணப்பட்டது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி பாறையில் நடந்து சென்று ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை