மேலும் செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரியர் பலி
21-Feb-2026
குடிநீர் திட்ட குழாயை ஒப்படைக்காமல் மோசடி
19-Feb-2026
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி, 40. இவர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மனைவி சித்ரா, இரு மகள்கள் உள்ளனர்.ஆறுமுகபாண்டி தொழில் முதலீட்டிற்காக பல்வேறு நபர்களிடம், 1 கோடியே 34 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். பலருக்கும் கடனை திரும்ப கொடுத்துள்ளார். இருப்பினும் சமீப காலமாக தொழில் முடக்கத்தால் வட்டி கொடுக்க முடியவில்லை.கந்துவட்டிக்காரர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். மனமுடைந்தவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஏற்கனவே கந்துவட்டிக்காரர்கள் மீது கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அவரது உறவினர்கள் லட்சுமி மில் முன்மறியல் செய்தனர்.
21-Feb-2026
19-Feb-2026