உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / காளை முட்டியதில் முதியவர் பலி

காளை முட்டியதில் முதியவர் பலி

காளை முட்டியதில் முதியவர் பலிதிருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் நேற்று காளை விடும் விழா நடந்தது. இதில், ஆந்திரா, கர்நாடகா, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில், திருப்பத்துார் அடுத்த சின்னமண்டலவாடியை சேர்ந்த சின்னமுனுசாமி, 55, என்பவர் காளை விடும் விழாவை பார்க்க வந்தார். காளை அவரை முட்டியதில் படுகாயமடைந்து பலியானார். ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை