மகனை காதலித்த மாணவிக்கு பளார்
திருப்பத்துார், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 50. விவசாயி. இவரது, 20 வயது மகன் கல்லுாரியில் படித்து வருகிறார். இவரும், திருப்பத்துாரை சேர்ந்த, 17, வயதுள்ள பள்ளி மாணவியும் காதலித்து வந்தனர்.இதையறிந்த லோகநாதன், மாணவியை கண்டித்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை, லோகநாதன் வழிமறித்து, இனி என் மகனுடன் பேசக்கூடாது எனக்கூறி கன்னத்தில், 'பளார்' என அறைந்தார். மாணவி, திருப்பத்துார் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார், லோகநாதனை கைது செய்தனர்.