பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கோவில் அர்ச்சகருக்கு காப்பு
ஆம்பூர், ஆம்பூரில், கோவிலில் ஊழவார பணியில் ஈடுபட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் அர்ச்சகரை, போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நாகநாதசுவாமி கோவில் அர்ச்சகர் தியாகராஜன், 40. இவர், இக்கோவிலில் உழவார பணியில் ஈடுபட்ட, 30, வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்படி, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் அர்ச்சகர் தியாகராஜன் மீது வழக்குப்பதிந்த நிலையில் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று காலை, புதுச்சேரியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர்.