மேலும் செய்திகள்
கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய கணவர்
21-Jun-2025
திருப்பத்துார்:மனைவியின் கள்ளக்காதலால் மனமுடைந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.திருப்பத்துார் மாவட்டம், தோரணம்வதி நாயக்கனுாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி பழனி, 30. இவரது மனைவி லட்சுமி, 25. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். லட்சுமி அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.பழனி, கள்ளக்காதலை கைவிட மனைவியிடம் வலியுறுத்தினார். லட்சுமியோ அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், கள்ளக்காதலை தொடர்ந்தார். இது தொடர்பாக, தம்பதிக்குள் நேற்று அதிகாலை தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த பழனி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Jun-2025