பயனில்லாத குடிநீர் சுத்திகரிப்பு கருவி
உடுமலை:உடுமலை நகராட்சி அலுவலகத்தில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி செயல்படாததால், பொதுமக்கள், பணியாளர்கள் பாதித்து வருகின்றனர்.உடுமலை நகராட்சி அலுவலகத்திற்கு, தினமும் பல்வேறு பணிகளுக்காக ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்றனர்.அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் என நகராட்சியில் பயன்பாட்டிற்காக, குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முறையாக பராமரிக்காததால், பழுதடைந்து, கடந்த ஒரு மாதமாக செயல்படாமல் உள்ளது. இதனால், நகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் குடிநீருக்கு வழியின்றி, பாதித்து வருகின்றனர். எனவே, இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.