ஊழியர்கள் உறுதிமொழியேற்பு
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நேற்று தாய்மொழி நாள் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. மேயர் தினேஷ்குமார், உறுதி மொழி வாசித்தார். மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அதை, திரும்பக் கூறி உறுதி மொழியேற்றனர்.இதில் முதன்மை பொறியாளர் செல்வநாயகம், மாநகர நல அலுவலர் முருகானந்த், உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதி மொழியேற்றனர்.