விவசாயிகள் குறைதீர் கூட்டம்
உடுமலை : உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நாளை (6ம் தேதி,) மதியம், 2:30 மணிக்கு, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், அரசு கல்லுாரியில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், மடத்துக்குளம், உடுமலை தாலுகாவிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள்ளார்.