உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆனைமலை ரோட்டில் அபாய வளைவுகள் 

ஆனைமலை ரோட்டில் அபாய வளைவுகள் 

உடுமலை;ஆனைமலை ரோட்டிலுள்ள அபாய வளைவுகளை மேம்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், முக்கோணம் பகுதியில் பிரிந்து, ஆனைமலை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த வழித்தடத்தில், பாப்பனுாத்து, சாளையூர், கொடிங்கியம், எரிசனம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. தென் மாவட்டங்களிலிருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவு இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில், அபாய வளைவு பகுதிகள் அதிகளவு உள்ளன. முக்கோணத்திலிருந்து வாளவாடி செல்லும் ரோடு பிரியும் பகுதி, ரயில்வே கேட் அருகில், சாளையூரிலிருந்து உடுக்கம்பாளையம் ரோடு பிரியும் பகுதி, அதே பகுதியில், மழை நீர் ஓடை குறுக்கிடும் பகுதி என ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அபாய வளைவுகள் உள்ளன.ரோடு குறுகலாக இருப்பதால், இந்த வளைவுகளில், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது. கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்லும் போது, பிற வாகனங்கள், விலகிச்செல்ல முடிவதில்லை.இந்த ரோட்டில், குறிப்பிட்ட துாரம் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அபாய வளைவுகள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ