சஹோதயா தடகளப் போட்டிகள் ஜெயந்தி பள்ளி மாணவர் அபாரம்
திருப்பூர்: திருப்பூர் 'சஹோதயா' சார்பில் நடந்த தடகளப்போட்டிகளில், ஜெயந்தி பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஏழு வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில், முதல் வகுப்பு மாணவர்களான தேவ்ரக்ஷித் தங்கப்பதக்கமும், நிகிலன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிருஷ்ணன், பள்ளி முதல்வர் மலர்விழி, உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், கவுரி உள்ளிட்டோர் பாராட்டினர்.