முகமூடி ஆசாமி நோட்டம் போலீசார் விசாரணை
திருப்பூர்: திருப்பூர் - காங்கயம் ரோடு வி.ஜி.வி., எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. இரு நாள் முன், குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் வலம் வந்த முகமூடி ஆசாமி, பூட்டியிருந்த வீடுகளில் ஜன்னல்களை திறந்தும், சிலர் வீட்டு கதவை தட்டியும் என, நோட்டமிட்டு சென்றுள்ளார்.மறுநாள் காலையில், இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.