உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகள் தாராளம் பொதுமக்கள் அதிருப்தி

ஆக்கிரமிப்புகள் தாராளம் பொதுமக்கள் அதிருப்தி

உடுமலை: உடுமலை நகரில் பிரதான ரோடுகளில் ஒன்றான ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, முக்கிய வணிக கடைகள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளன.இதனால், இந்த ரோடு எப்பொழுதும் போக்குவரத்து அதிகம் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், இந்த ரோட்டில் தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுவதும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திங்கட்கிழமைகளில் சந்தை கூடுகிறது. அன்று ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை