மாநகராட்சி 29வது வார்டில் நிழற்கூரை பணி துவக்கம்
திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 29 வது வார்டு சாதிக்பாட்ஷா நகர் பள்ளிவாசல் ரோட்டில் தொகுதி மேம்பாட்டு நிதியில், 30 லட்சம் ரூபாயில் புதியதாக நிழற்கூரை அமைக்கும் பணி நடந்தது. இதனை, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், துணை மேயர் பாலசுப்ரமணியம், தெற்கு நகர செயலாளர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.