பள்ளியில் மாணவர் சேர்க்கை
திருப்பூர்: விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. 'வனம் இந்தியா' அறக்கட்டளை நிறுவனர் சுந்தரராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றறார். பள்ளி தாளாளர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். முதல்வர் மனோன்மணி முன்னிலை வகித்தார். செயலர் வேலவேந்தன், துணைமுதல்வர் அபிநயா வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பரிசளிப்பு விழா நடந்தது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர் சேர்க்கை மார்ச் 10ல் துவங்கும் என்று பள்ளி நிர்வாகத்தினர் அறிவித்தனர்.