உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து விதிமீறல்: 1,282 வழக்குப்பதிவு

போக்குவரத்து விதிமீறல்: 1,282 வழக்குப்பதிவு

காங்கயம் : காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறியவர்கள் மீது, 1,282 வழக்கு பதிவு செய்து, 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அவ்வகையில், கடந்த பிப்., மாதம் காங்கயம் நகரில் நடத்திய வாகன சோதனையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, 1,282 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 42 ஆயிரம் ரூபாய் அபராதத்தை காங்கயம் போக்குவரத்து போலீசார் வசூல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை