உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துங்க

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துங்க

உடுமலை; உடுமலை ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி, கேந்திர வித்யாலய பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.ராஜேந்திரா ரோட்டில் பள்ளிக்கு அருகில் 'டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பரபரப்பான ரோட்டில், இவ்வாறு மதுக்கடை இருப்பதால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.பள்ளிக்கு அருகில் நகராட்சி அண்ணா பூங்கா இருப்பது, 'குடி'மகன்களுக்கு மேலும் வசதியாக மாறிவிட்டது. பள்ளி நடக்கும் நேரத்தில் கூட பூங்கா அருகில் நின்று மது அருந்துகின்றனர். டாஸ்மாக் அருகில் இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், தவறான வழிகாட்டுதல் இல்லாமல் பள்ளியின் சூழலை மாற்றுவதற்கும், ராஜேந்திரா ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ