லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு
திருப்பூர் : லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்., 28 முதல் வரும் நவ., 3ம் தேதி வரை, 'நேர்மை எனும் கலாச்சாரமே, தேசத்திற்கான செழுமை' என்ற தலைப்பில் கடைபிடிக்கப்படுகிறது.இதையொட்டி, லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் சிக்கண்ணா அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு-2 சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் சசிலேகா, கீதா லட்சுமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் நடனமாடியும், விழிப்புணர்வு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினர்.