உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு குழாய் உடைந்து 24 மணி நேரமும் குடிநீர் விரயம்

அத்திக்கடவு குழாய் உடைந்து 24 மணி நேரமும் குடிநீர் விரயம்

பல்லடம்; பல்லடம் அருகே, அத்திக்கடவு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் விரயமாகி வருகிறது.பல்லடம் அடுத்த, காரணம்பேட்டை- - சோமனுார் ரோட்டில், அத்திக்கடவு பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இதில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆகிறது. இதிலிருந்து, 24 மணி நேரமும் குடிநீர் வெளியேறி விரயமாகி வருகிறது.இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், '24 மணி நேரமும் குடிநீர் விரயமாகி, அருகிலுள்ள காலி இடத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. குழாய் உடைப்பு காரணமாக வெளியேறும் குடிநீருடன் கழிவு நீரும் கலக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.இது, குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் அபாயம் உள்ளது. குடிநீர் பற்றாக்குறை பரவலாக உள்ள சூழலில், குடிநீரை இதுபோன்று விரயமாக்குவது கவலை அளிக்கிறது.குழாய் உடைப்பு குறித்து, ஊராட்சி நிர்வாகம் மூலம், குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நீண்ட நாட்கள் ஆகியும், குடிநீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. எனவே, குழாய் உடைப்பை சரிசெய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !