அய்யப்ப பக்தர்கள் அன்னதானம்
அனுப்பர்பாளையம்,; திருப்பூர், ஸ்ரீ சபரி சாஸ்தா அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில், 17ம் ஆண்டு அன்னதான விழா, அவிநாசி ரோடு, வளையங்காடு மாகாளியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், கூட்டு பஜனை வழிபாடு மற்றும் அம்பல அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.