உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மாநகராட்சியை கண்டித்து நாளை பா.ஜ., ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை படுதோல்வி அடைந்ததை கண்டித்து, நாளை, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசன் அறிக்கை: திருப்பூர் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதை கண்டித்து, வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, மாநகராட்சியின், 60 வார்டுகளிலும், மக்களை திரட்டிஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தி.மு.க., ஆட்சியை கண்டித்தும், மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை