நுால் வெளியீட்டு விழா
டாப்லைட் நுாலகம் மற்றும் நடவு பதிப்பகம் சார்பில், நுால் வெளியீட்டு விழா, திருப்பூர் - பல்லடம்ரோடு, குன்னாங்கல்பாளையத்திலுள்ள டாப்லைட் நுாலகத்தில் நடந்தது. கவிஞர் முத்துபாரதி எழுதிய 'இலங்கை' என்கிற பயண அனுபவ நுால் வெளியிடப்பட்டது. யாழி இந்துமதி, நுால் அறிமுகம் செய்தார். போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சேகர், நுாலை வெளியிட்டார். தாய்த் தமிழ்ப் பள்ளி தாளாளர் தங்கராசு, டாக்டர் பால முரளி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.