உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் மோதி வியாபாரி பலி

பஸ் மோதி வியாபாரி பலி

காங்கயம்; திருப்பூர் மாவட்டம், வசிவரம்புதுாரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 50. திருப்பூரில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கடை வியாபாரம் செய்து வருகிறார். அதற்காக பல ஊர்களுக்கு சென்று பழைய பொருட்களை வாங்கி வருவது வழக்கம். நேற்று காலை காங்கயம் - கரூர் ரோட்டில் முத்துார் பிரிவு அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவையில் இருந்து காங்கயம் வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோதியது. பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி