உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழைப்பொழிவு குறைவால்  பயிர் காப்பீடு செய்ய அழைப்பு 

மழைப்பொழிவு குறைவால்  பயிர் காப்பீடு செய்ய அழைப்பு 

உடுமலை: மழைப்பொழிவு குறைவாக இருப்பதால், நடப்பு சீசனில் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என உடுமலை வட்டார வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அத்துறையினர் அறிக்கை: நடப்பு சீசனில் மழைப்பொழிவு குறைவாக தென்படுகிறது. எனவே, பயிர் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும். சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புக், ஆதார் அட்டை நகலுடன் அருகிலுள்ள இ-சேவை மையத்தில், காப்பீடு செய்யலாம். அக்., ல் விதைத்த நெற்பயிர்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 578 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்யலாம்; நவ., 15 கடைசி நாளாகும். சோளம், ஒரு ஏக்கர் 55 ரூபாய், டிச., 16 கடைசிநாள், மக்காச்சோளம் ஏக்கருக்கு, 545 ரூபாய், நவ., 30 கடைசிநாள்; கொண்டைக்கடலை ஏக்கருக்கு, 254 ரூபாய் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். நவ., 30 காப்பீடு செய்ய கடைசி நாளாகும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ