கிட்ஸ் கிளப் பள்ளியில் திருவிளக்கு வழிபாடு
திருப்பூர்; திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, அனைத்து ஆசிரியர்களும் இணைந்து திருவிளக்கு வழிபாடு நடத்தினர். நுாறு பெண்கள் பங்கேற்று, சிறப்பு வழிபாடு செய்தனர். பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் நம் பாரம்பரியத்தின் அழகான நிகழ்வாக நவராத்திரி விழா சிறப்பாக நடந்ததாக, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.