உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊட்டச்சத்து உறுதி செய்ய வலியுறுத்தல்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊட்டச்சத்து உறுதி செய்ய வலியுறுத்தல்

உடுமலை, : உடுமலை நகராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, ஊட்டச்சத்து உறுதி செய்ய வேண்டும், என குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.உடுமலை நகராட்சி அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். கமிஷனர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இதில், குழந்தை கடத்தப்படுதல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து வாங்குதல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.குழந்தை பிறப்பு பதிவு, ஆதார் அட்டை பதிவு, பள்ளிகளில் சேர்த்தல், குழந்தைகளுக்கு காலம் தவறாமல் தடுப்பூசி போடுதல் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தல் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளித்தல்.10ம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி செல்வதை உறுதிப்படுத்துதல், குழந்தை தொழிலாளர்கள் அறவே இல்லாமல் உறுதி செய்தல்.ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத, நகரங்கள், கிராமங்களை உறுதி செய்தல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், உள்ளிட்ட இலக்கை அடையச் செய்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் ஆசாத், ராஜ சேகரன், அஸ்வதி, சகுந்தலா, சமூக நலத்துறை அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு அலுவலர் தேவகி, தொழிலாளர் அமைப்பு உதவியாளர் ராஜமுருகன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி, உடுமலை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பகவதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில், யோகானந்த், நகராட்சி சுகாதார அலுவலர் நாட்ராயன், சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !